மொரட்டுவ, எகடஉயன பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த ரோஹண டி சொய்சா, வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து கடந்த 26ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், அவர் தனது கடமைகளை முடித்து வழக்கம் போல் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மொரொன்டுடுவ, கந்தகடே பிரதேசத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்று கொண்டிருந்த சைக்கிளுடன் மோதியுள்ளமை தெரியவந்துள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே வீதியில் விழுந்துள்ளார்.