கள்ளத்தனமாக அச்சிடப்பட்ட 'அம்ப யஹளுவோ' நூலின் பிரதிகளை தனது கடையில் காட்சிப்படுத்திய மற்றும் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒரு வர்த்தகரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த சந்தேகநபர் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார்.
களுத்துறை தெற்குப் பிரதேசத்தில் புத்தகக் கடையொன்றை நடத்தி வரும் இந்த சந்தேகநபர் 39 வயதுடையவர். சம்பந்தப்பட்ட புத்தகக் கடையில் இந்த போலி நூல்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு 2 மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.