காலி தெவட்ட பிரதேசத்தில் கடற்கரையோரம் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத கடைகளை அகற்றும் விசேட நடவடிக்கை ஒன்று இன்று (10) முற்பகல் மேற்கொள்ளப்பட்டது. கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் பொலிஸார் உட்பட பல அரச நிறுவனங்களின் அதிகாரிகள் இணைந்து இந்த சட்டவிரோத கட்டுமானங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் கடைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது அதற்கு எதிராக பிரதேச வர்த்தகர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.