IDH இல் மனைவி டெங்குவால் அல்ல, தரமற்ற மருந்து காரணமாகவே இறந்தாள் என கணவன் பொலிஸில்

husband-tells-police-that-wife-died-at-idh-not-from-dengue-but-from-substandard-medicine

கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலையில் (IDH) டெங்கு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஹோமாகம ஹபரகடை வசிக்கும் ஷானிகா சமரபால் (37) என்ற இரண்டு குழந்தைகளின் தாயின் மரணம், தரமற்ற மருந்து வழங்கப்பட்டதால் ஏற்பட்டதாக சந்தேகித்து, அது குறித்து விசாரணை நடத்துமாறு அவரது கணவர் நேற்று (23) அத்துருகிரிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.




மரணமடைந்த பெண்ணின் கணவரான ஹோமாகம, ஹபரகடை வசிக்கும் பி. சானக மதுசங்க கருத்துத் தெரிவிக்கையில், தனது மனைவி டெங்கு நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். குறித்த மருந்து வழங்கப்பட்ட உடனேயே தனது மனைவியின் இதயம் நின்றுவிட்டதாகவும், ஆறு தடவைகள் இதயம் நின்றபோதிலும், ஒவ்வொரு முறையும் சிகிச்சை அளித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தபோதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவத்திற்கான காரணம் மருத்துவர்களாலும் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும், இது குறித்து தற்போது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மதுசங்க தெரிவித்தார். "என்ன செய்தாலும் இப்போது எனக்கு என் மனைவி இல்லை. குழந்தைகளுக்கு அம்மா இல்லை. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

news-2025-12-24-032052

Post a Comment

Previous Post Next Post