2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப்பத்திர (உயர்தர) பரீட்சைக்கு தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் நாளை (06) நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தத் தடை பரீட்சைக் காலம் முடியும் வரை அமுலில் இருக்கும்.
இதற்கிடையில், அனர்த்தங்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பாடங்களுக்கான பரீட்சை, ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் நடத்தப்படவுள்ளதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.