பிரபல பௌத்த மத போதகரான கத்னோருவே சிறிதம்ம தேரருக்கு, கஹவத்தையைச் சேர்ந்த ஒரு மாணிக்க வியாபாரி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட பேழையை காணிக்கையாக வழங்கினார்.
கத்னோருவே தேரர் வருகை தந்து தர்ம உபதேசம் செய்த பின்னர், குருகே மாணிக்கத்தின் நிறுவனர் காலஞ்சென்ற ஜினதாச குருகே மற்றும் அவரது மனைவி சுவர்ணா குருகே ஆகியோரின் திருமண ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில், குருகே மாணிக்கத்தின் உரிமையாளர் கயான் குருகே மற்றும் அவரது தாயார் சுவர்ணா குருகே ஆகியோரால் 25ஆம் திகதி பேழை காணிக்கையாக வழங்கப்பட்டது.இந்த விசேட பேழையில் எட்டு கரட் நீல மாணிக்கம் பதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல பெறுமதியான நீல மாணிக்கங்கள், சிவப்பு கற்கள் உட்பட பல பெறுமதியான மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.தங்க முலாம் பூசப்பட்டு, செதுக்கல்களுடன் பேழை வடிவமைக்கப்பட்டிருந்தது.
மாணிக்கக் கற்களின் மதிப்பு கணக்கிடப்படவில்லை என்று பேழையை காணிக்கையாக வழங்கிய கஹவத்தை குருகே மாணிக்கத்தின் உரிமையாளர் கயான் குருகே தெரிவித்தார். இது ஒரு புனிதமான செயல் என்பதால், தற்போதைய சந்தை மதிப்பின்படி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மாணிக்கக் கற்கள் பேழையில் பதிக்கப்பட்டுள்ளன. ப்ளூ சஃபையர் வகையைச் சேர்ந்த 32 மாணிக்கக் கற்களும் பேழையில் பதிக்கப்பட்டுள்ளன.