18 வயதுக்குட்பட்ட 36க்கும் மேற்பட்ட சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஒரு வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது. கண்டி பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கண்டி பேராதனியாவில் வசிக்கும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் சாதனங்களை பரிசோதித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர் 18 வயதுக்குட்பட்ட 36க்கும் மேற்பட்ட சிறுவர்களை இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளதாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் மேலும் சிலருடன் இணைந்து பாலியல் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக சந்தேகநபருக்கு எதிராக 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 38 வயதுடைய சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படவிருந்தார். குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமாலா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.