ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் சடலம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில் அவசர மீட்புப் படையினரால் கண்டுபிடிக்கப்படும் விதத்தை காட்டும் ஒரு புகைப்படம் உண்மையானது என்று சித்தரித்து இந்த நாட்களில் இணையம் முழுவதும் பரவி வருகிறது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கடந்த சனிக்கிழமை கமேனி உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் இதற்கு முன்னர் அறிவித்திருந்தன.
அதன் பின்னர், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட தருணம் என்று கூறி அந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.இருப்பினும், இது உண்மையான புகைப்படம் அல்ல, அது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டது என்பதை கூகிள் நிறுவனத்தின் AI கண்டறிதல் கருவி தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. கூகிள் நிறுவனத்தின் 'SynthID' எனப்படும் இந்தக் கருவி செயல்படுவது, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான AI மாதிரிகள் மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களில் உட்பொதிக்கப்பட்டுள்ள மறைக்கப்பட்ட நீர் அடையாளங்களை (watermarks) சரிபார்ப்பதன் மூலமாகும்.
இந்தப் புகைப்படத்தின் இரண்டு வெவ்வேறு பதிப்புகளை (versions) பகுப்பாய்வு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட பரிசோதனைக் கருவி தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட புகைப்படம் கூகிள் நிறுவனத்திற்கு சொந்தமான செயற்கை நுண்ணறிவு கருவியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு தொகுப்பு ஊடகம் (Synthetic media) என்பதை "மிகவும் உயர்வான" நம்பிக்கையுடன் உறுதிப்படுத்த முடியும் என்று அதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.