சேசிஸ் இலக்கங்களை மாற்றி மோசடி செய்தமைக்கு உதவிய RMV அதிகாரி கைது.

rmv-boss-arrested-for-helping-chassis-number-transfer-scam

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். வாகனப் பதிவுச் செயன்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய முறைகேடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையை அடுத்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டு, ஒரு கார் வண்டியின் சேசிஸ் இலக்கத்தை சட்டவிரோதமாக மாற்றி, அதனை போலியாகப் பதிவு செய்வதற்கு நேரடியாக உதவி மற்றும் தூண்டுதல் அளித்ததாகும்.


இச்சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் குறித்த சந்தேகநபர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இன்று (28) அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வடமேல் மாகாண சபையின் வீதி மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய கமல் அமரசிங்க, 2025ஆம் ஆண்டுக்கான மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பதவியேற்றிருந்தார்.

Post a Comment

Previous Post Next Post