அமெரிக்க தாக்குதலில் காயமடைந்து, இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு, இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 238 ஈரானியர்கள், நேற்று (14) இரவு ஈரானிய சிறப்பு விமானம் மூலம் மீண்டும் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்குச் சொந்தமான மெராஜ் விமான சேவையின் (Meraj Air Line) IRAN – 09 என்ற இந்த சிறப்பு விமானம், 14 ஆம் திகதி பிற்பகல் 04.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இலங்கை விமானப்படை தளத்திற்கு வந்தடைந்தது.
பின்னர், வெலிசர தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 206 ஈரானியர்களும், கொக்கல தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 38 ஈரானியர்களும் இந்த விமானத்திற்கு அனுப்பப்பட்டனர்.