
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சடங்குகளில் கலந்துகொண்டு, தித்வா சூறாவளியால் அழிக்கப்பட்ட அனுராதபுரம், கல்னேவ இந்திரஜித் சம்பத் சேனாரத்னவின் புதிய வீட்டில் இன்று (14) காலை நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.
கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட தித்வா அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட நஷ்டஈட்டின் கீழ், கல்னேவ இந்திரஜித் சம்பத் சேனாரத்னவின் புதிய வீடு மூன்று மாத காலப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இது கல்னேவ பிரதேச செயலாளர் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக கட்டப்படும் ஆறு புதிய வீடுகளில் ஒன்றாகும். மேலும், இந்த பிரதேச செயலாளர் பிரிவில் பகுதியளவில் சேதமடைந்த 66 வீடுகளுக்கும் இதுவரை நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அவர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடினார்.
இதற்கிடையில், புத்தாண்டு சுபநேர சடங்குகளை நிறைவேற்றும் உத்தியோகபூர்வ கலாச்சார நிகழ்வு கம்பஹா பிரதேசத்தில் உள்ள தர்ஷன வீரசிங்கவின் வீட்டில் நடைபெற்றது. அந்த புத்தாண்டு விழாவில் பிரதமர் ஹரினி அமரசூரிய, கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் சேனவி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.