ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே என்ற சந்தேகநபர் குறித்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அவர்களால் 2026.06.06 அன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. சமூக மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட அந்தக் கருத்து உண்மையற்றது என இலங்கை பொலிஸ், பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடாக ஓர் அறிக்கையை வெளியிட்டு வலியுறுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட சந்தேகநபருக்கு இலங்கை பொலிஸாரால் எந்தவித மனிதாபிமானமற்ற நடத்தையோ அல்லது தாக்குதலோ மேற்கொள்ளப்படவில்லை என சம்பந்தப்பட்ட அறிவிப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சாதாரண சந்தேகநபர் ஒருவருடன் எவ்வாறு நடந்துகொள்ளப்படுமோ அதேபோல அவருடனும் சட்டபூர்வமாகவே நடந்துகொள்ளப்பட்டுள்ளதுடன், எந்தவித புறக்கணிப்போ அல்லது விசேட கவனமோ அவருக்கு வழங்கப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பான விடயங்கள் ஏற்கனவே கௌரவ நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் சுட்டிக்காட்டுகிறது. ஆகவே, நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டு ஊடகங்களுக்கு இவ்வாறான கருத்துக்களை வெளியிடும்போது மிகவும் நிதானத்துடன் கருத்துக்களை வெளியிடுவது முக்கியம் என இலங்கை பொலிஸ் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு மேலும் அறிவிக்கிறது.