
நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளது.
அது, வரவிருக்கும் எல் நினோ முன்னறிவிப்புகள் காரணமாகும்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச். எம். பி. எஸ். டி. ஹேரத், 80 நீர்த்தேக்கங்களில் தற்போது சுமார் 48% நீர் கொள்ளளவு காணப்படுவதாகத் தெரிவித்தார்.
முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் உள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அது, வெப்பமான காலநிலை குறித்து ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுவதன் மூலமாகும்.
அது குறித்து அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.