யாழ்ப்பாணப் பிரதேசத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவரால் சிறைச்சாலை அதிகாரியொருவர் தாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்த சந்தேகநபர் நேற்று (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறித்த சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை மேலும் நீடிக்க உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் இந்த கைதியை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தபோது அவர் அங்கு இருந்த சிறைச்சாலை அதிகாரியை இவ்வாறு தாக்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.