ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் அணிகளுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் இல்லையாம்

no-five-star-hotels-for-cricket-teams-at-the-asian-games-in-japan

ஜப்பானின் நகோயாவில் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் கிரிக்கெட் அணிகளுக்கு ஐந்த நட்சத்திர ஹோட்டல் வசதிகளை வழங்க முடியாது என ஏற்பாட்டாளர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். இம்முறை போட்டிகளில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஜப்பான், ஹொங்கொங், மலேசியா, ஓமான் மற்றும் நேபாளம் ஆகிய 10 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் போட்டியிடும்.

நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி இந்த மாதம் 29ஆம் திகதி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




பொதுவாக வெளிநாட்டுப் போட்டிச் சுற்றுப்பயணங்களின் போது கிரிக்கெட் வீரர்களுக்கு ஐந்த நட்சத்திர ஹோட்டல் தங்குமிடங்கள் கட்டாயமாக வழங்கப்படுவது வழக்கம் என்றாலும், போட்டிகள் நடைபெறும் நகோயா நகரில் அத்தகைய உயர்தர ஹோட்டல்கள் குறைவாக இருப்பதால், இம்முறை அந்த வசதியை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டோக்கியோ அல்லது ஒசாகா நகரங்களில் உள்ள ஐந்த நட்சத்திர ஹோட்டல்களில் வீரர்கள் தங்கினால், அங்கிருந்து மைதானத்திற்கு புல்லட் ரயிலில் ஒன்றரை மணிநேரம் ஆகும். இதனால் வீரர்களுக்கு ஏற்படும் பயண அசௌகரியத்தைத் தவிர்க்கும் பொருட்டு, போட்டிகள் நடைபெறும் நகோயா நகரிலேயே தங்குமிடங்களை வழங்க ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தங்குமிட வசதிகள் குறித்து ஆரம்பத்தில் சில சூடான விவாதங்கள் ஏற்பட்ட போதிலும், இலங்கை வீரர்களின் வசதிகள் குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் இடைக்காலக் குழுவின் தலைவர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். மேலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, வழங்கப்பட்டுள்ள தங்குமிடங்கள் ஐந்த நட்சத்திரத் தரத்தில் இல்லாவிட்டாலும், அவை வசதியான மட்டத்தில் இருப்பதை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, ஹோட்டல் வசதிகளை விட மைதானம் மற்றும் ஆடுகளம் மீது அதிக கவனம் செலுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.




ஏற்கனவே ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் பிரதிநிதிகள் குழு ஜப்பானுக்குச் சென்று போட்டிகள் நடைபெறும் மைதானம் மற்றும் ஆடுகளங்களை ஆய்வு செய்துள்ளதுடன், அந்த ஆய்வுகளுக்குப் பிறகு மைதானமும் ஆடுகளங்களும் திருப்திகரமான மட்டத்தில் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல்லேகல மைதானத்தின் பொறுப்பு அதிகாரிகளின் தொழில்நுட்ப உதவியுடன், முன்னர் பேஸ்பால் மைதானமாக இருந்த இடத்தில் ஒரு கலப்பின ஆடுகளத்தை அமைத்து இந்த கிரிக்கெட் மைதானம் போட்டிகளுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது.

no-five-star-hotels-for-cricket-teams-at-the-asian-games-in-japan

Post a Comment

Previous Post Next Post