முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (05) காலை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையானார். பொலிஸாரால் அவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அவரது வருகை கட்டாயமானது என்றும், அவர் வராவிட்டால் கைது செய்வதற்கான நீதிமன்ற பிடியாணை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் முன்னதாக அறிவித்திருந்தனர்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (05) காலை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையானார். பொலிஸாரால் அவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அவரது வருகை கட்டாயமானது என்றும், அவர் வராவிட்டால் கைது செய்வதற்கான நீதிமன்ற பிடியாணை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் முன்னதாக அறிவித்திருந்தனர்.
நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையான சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர், இது தனது குடும்பத்திற்கு எதிரான அரசியல் பழிவாங்கல் என வலியுறுத்தினார். "நிதி மோசடி விசாரணைப் பிரிவு தனக்கு புதிய இடம் அல்ல என்றும், தனது முழு குடும்பத்தையும் சிறையில் அடைக்கும் முயற்சி இது என்றும்" அவர் கூறினார். எந்தவித ஆதாரமும் இல்லாமல், சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு வழக்கில் தனது இரண்டு குழந்தைகளையும் தொடர்புபடுத்தி, புத்தாண்டு தினத்தன்று இதை திட்டமிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அரசாங்கம் இதற்காக இலட்சக்கணக்கான பணத்தை செலவழித்து அவதூறு பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். தானோ அல்லது தனது குழந்தைகளோ எந்த தவறும் செய்யவில்லை என்றும், இதற்கு தான் பயப்படவில்லை என்றும், நீதி மற்றும் நியாயம் நிலைநாட்டப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
'இது புதிய இடம் அல்ல. இது ஒரு முழுமையான அரசியல் பழிவாங்கல்... இந்த முழு குடும்பத்தையும் சிறையில் அடைக்க முயற்சிக்கிறார்கள்... எந்த ஆதாரமும் இல்லாமல் சுமார் 10 வருடங்கள் பழமையான ஒரு வழக்கில் எனது இரண்டு குழந்தைகளையும் இழுத்து, பின்னர் என்னையும் இழுத்து, புத்தாண்டு தினத்தன்று செய்யப்பட்ட ஒரு நாள் திட்டம்... வேறு ஒன்றும் இல்லை. இதற்காக அரசாங்கம் இலட்சக்கணக்கில் செலவழிக்கிறது, இந்த அவதூறுக்காக... எந்த தவறும் செய்யவில்லை, எனது இரண்டு குழந்தைகளும் தவறு செய்யவில்லை, நானும் தவறு செய்யவில்லை... எனவே நாங்கள் இதை எதிர்கொள்கிறோம்...'
சதோச நிறுவனத்திற்கு சொந்தமான லொரி வண்டியை தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேலும் பல விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக சதோச நிறுவனத்தின் போக்குவரத்து முகாமையாளராக கடமையாற்றிய இந்திக ரத்னமலால நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், அவரது மகன் ஜோஹான் பெர்னாண்டோவுக்கு சதோச நிறுவனத்திற்கு சொந்தமான லொரி வண்டியை எத்தனால் நிறுவனத்தின் பணிகளுக்காக பயன்படுத்த போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்ததாக இந்திக ரத்னமலால மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பின்னர் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரத்னமலால, எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், நிதி மோசடி விசாரணைப் பிரிவு தனக்கு பழக்கமான இடம் என்றும், தன்னை அழைத்ததற்கான உண்மையான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இங்கு தெரிவித்தார்.