பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள சுற்றுலா பங்களாக்கள் மற்றும் விடுதி ஓய்வு விடுதிகளை முன்பதிவு செய்வதற்காக புதிய இணையவழி (Online) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு மிகவும் திறமையான மற்றும் வசதியான சேவையை வழங்கும் நோக்குடன் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு அறிவிக்கிறது.
இந்த வசதியைப் பெறுவதற்காக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.pubad.gov.lk க்குச் செல்வதன் மூலம் வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. தற்போதைய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் ஆளுகை கொள்கையை மேலும் விரிவுபடுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பங்களாக்கள் மற்றும் விடுதி ஓய்வு விடுதிகளை இணையவழி முறையில் முன்பதிவு செய்யும் இந்த அமைப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கடந்த 29 ஆம் திகதி பொறுப்பு அமைச்சர் வந்தனா அபயரத்ன அவர்களின் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பொது நிர்வாக அமைச்சு குறிப்பிடுகின்றபடி நுவரெலியா, தியத்தலாவ மற்றும் பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள 08 சுற்றுலா பங்களாக்களை இந்த முறை மூலம் முன்பதிவு செய்ய முடியும். அத்துடன் யாழ்ப்பாணம், கதிர்காமம், மொனராகலை, மஹியங்கனை, மிஹிந்தலை, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள விடுதி ஓய்வு விடுதிகளும் இந்த இணையவழி அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த புதிய சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விற்காக அமைச்சின் செயலாளர் எஸ். அலோக்க பண்டார அவர்கள் உட்பட அமைச்சின் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.