கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள சாக்யமுனி சர்வக்ஞ தாதுக்களை, உயிருள்ள புத்தராகக் கருதி நேரில் தரிசிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், ஷிரந்தி ராஜபக்ஷவும் இன்று சென்றிருந்தனர். இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள "தேவ்னி மோரி" வரலாற்று சிறப்புமிக்க புனித ஸ்தலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த உன்னதமான ஸ்ரீ சர்வக்ஞ தாதுக்களை வழிபடுவதற்கான இந்த அற்புதமான சந்தர்ப்பம், இந்தியாவிற்கும் நமது நாட்டிற்கும் இடையிலான பல நூற்றாண்டுகால பழமையான பௌத்த உறவுகளுக்கு ஒரு புதிய உயிரூட்டிய சகோதரத்துவமிக்க சந்தர்ப்பமாகும்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, இலங்கை பௌத்த மக்களுக்கு இந்த உன்னதமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக குறிப்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மரியாதைக்குரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த விசேட நிகழ்வை ஒருங்கிணைத்த இலங்கையின் பதில் இந்திய உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே உட்பட இரு நாடுகளின் அனைத்து இராஜதந்திர பிரதிநிதிகளையும் நன்றியுடன் நினைவு கூர்வதாகவும் தெரிவித்தார்.
இந்த தாதுப் பொருட்களைக் காட்சிப்படுத்தி, பக்தர்களுக்கு மரியாதையுடன் தரிசிக்கவும், வழிபடவும் வாய்ப்பளித்த கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி வணக்கத்துக்குரிய கிரின்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் மகா சங்கத்தினருக்கும் முன்னாள் ஜனாதிபதி தனது வணக்கத்துக்குரிய நன்றியைத் தெரிவித்துள்ளார்.