
மஹவ பிரதேசத்தில் ஒரு வீட்டில் கசிப்பு வேட்டைக்குச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரைத் தாக்கி, மிளகாய்த்தூள் தூவி, அவரது கையை கடித்ததாகக் கூறப்படும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மஹவ தலைமையகப் பொலிஸின் ஊழல் தடுப்புப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ள ஒரு அதிகாரியே இந்தச் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட சோதனையின் போது சந்தேகநபரிடமிருந்து 25 கசிப்புப் போத்தல்கள் அடங்கிய ஒரு கொள்கலன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சார்ஜன்டின் கையை பலமுறை கடித்து, சமையலறைக்கு ஓடிச் சென்று அவருக்கு மிளகாய்த்தூள் வீசித் தாக்கி தப்பிச் செல்ல முயன்றபோது, பொலிஸார் சந்தேகநபரை துரத்திச் சென்று கைது செய்துள்ளனர். காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கசிப்பு கடத்தல், பொலிஸ் அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்தல், குற்றவியல் அத்துமீறல் மற்றும் காயம் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக பிரதேசத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று (22) 'லங்கா தீப'வுக்கு தெரிவித்தார். அவர் மருத்துவ ஆலோசனைப்படி வீட்டில் தங்கியிருப்பவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹவ தலைமையகப் பொலிஸின் ஊழல் தடுப்புப் பிரிவு இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.