வென்னப்புவ வைக்கால் பிரதேசத்தில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற ஒருவரை பிரதேசவாசிகள் தலையிட்டுப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த செய்தி நேற்று முன்தினம் (08) காலை பதிவாகியுள்ளது. கடைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த யுவதி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, அவளைப் பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இந்த சந்தேகநபர், மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாக்கி அவளைக் கீழே தள்ளி, உடனடியாக அவளது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்ற போது யுவதி கத்தியுள்ளாள்.
இரு மோட்டார் சைக்கிள்களும் கவிழ்ந்த பின்னர், கொள்ளையிடப்பட்ட சங்கிலியை எடுத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் செல்ல அந்த நபர் முயன்றபோது, சத்தம் கேட்டு அங்கு வந்த தாயும் மகனும் உடனடியாகச் செயல்பட்டுள்ளனர். மகன் ஓடிச் சென்று அவ்வாறு தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரைப் பிடிக்க முடிந்துள்ளது. இவ்வாறு பிரதேசவாசிகளின் பிடியில் சிக்கிய சந்தேகநபர் பின்னர் தாக்கப்பட்டார்.சந்தேகநபரும் அவர் வந்த மோட்டார் சைக்கிளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆரம்பகட்ட விசாரணைகளில், இவ்வாறு கைது செய்யப்பட்டவர் களுத்துறை மல்வத்த வீதி பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.