எரிபொருள் வரிசைகள் குறைந்ததால் இலவச வாகன நிறுத்தம் நிறுத்தப்பட்டது - கொழும்பு மாநகர சபை

free-parking-stopped-as-fuel-queues-reduced---colombo-municipal-council

கொழும்பு மாநகர எல்லைக்குள் வாகனங்களை நிறுத்துவதற்காக முன்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த கட்டணம் அறவிடும் செயல்முறை நாளை (23) காலை 6.00 மணி முதல் மீண்டும் நடைமுறைப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.




வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை மீண்டும் அறவிடுவது தொடர்பான இந்த புதிய முடிவு கொழும்பு மாநகர சபையின் நிதி விவகாரங்களுக்கான நிரந்தரக் குழு கூடியபோது எடுக்கப்பட்டது.

கடந்த காலப்பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்து கடுமையான வாகன வரிசைகள் உருவாகியிருந்தன. இதனால் நகரின் வாகன நிறுத்துமிடங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக, எரிபொருள் பெறுவதற்காக வரும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் ஒரு நடவடிக்கையாக, கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சம்பந்தப்பட்ட வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நகர சபை நடவடிக்கை எடுத்திருந்தது.




எவ்வாறாயினும், தற்போது QR குறியீட்டு முறை மற்றும் வாகனங்களின் பதிவு எண்ணின் கடைசி இலக்கம் ஒற்றைப்படையா அல்லது இரட்டைப்படையா என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்ட எரிபொருள் விநியோகத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த புதிய முறைகள் காரணமாக கொழும்பு நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்த வாகன வரிசைகள் கணிசமான அளவில் குறைந்துள்ளதை அவதானித்ததன் பின்னர், வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை மீண்டும் அறவிட அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post