இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு வழங்கப்பட்ட பதில் பின்வருமாறு.
கேள்வி-
சுகீஸ்வர பண்டாரவின் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
பதில்-
'ஐயோ, சுகீஸ்வர பண்டாரவின் போராட்டங்களால் எங்களுக்கு என்ன வேலை என்று சொல்லுங்கள். 10, 15 பேரை அழைத்துச் சென்று எங்காவது ஒரு இடத்தில் கத்தினாலோ அரசாங்கத்திற்கு என்ன நடக்கும்?
எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கிராமங்களில் வீடுகளுக்கு முன்னால் சென்று கத்தும்போது, அந்தக் கிராம மக்கள் அதற்கு இடமளிக்க மாட்டார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்.
எனவே, கிராம மக்களுக்கு அது எந்தக் கட்சி என்று முக்கியமில்லை. அவர்கள் அப்படிப்பட்டவர்களை 'ஹூ' என்று சத்தம் போட்டு விரட்டிவிடுவார்கள். எனவே நீங்களும் யாருடைய வீட்டிற்காவது முன்னால் சென்று கத்திப் பாருங்கள், அதற்கு மக்கள் சும்மா இருப்பார்களா என்று. வீடுகளுக்கு முன்னால் கத்த யாருக்கும் அப்படி ஒரு உரிமை இல்லையே.
அரசாங்கத்துடன் ஒரு பிரச்சினை இருந்தால், அதற்குரிய நிறுவனங்கள் உள்ளன, அமைச்சகங்கள் உள்ளன. அப்படிப்பட்ட இடங்களுக்குச் சென்று நாங்களும் ஆர்ப்பாட்டங்கள் செய்தோமே. நான்கு ஐந்து பேருடன் அல்ல, ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு சென்று. நாங்கள் யாருடைய வீடுகளுக்கும் முன்னால் செல்லவில்லையே.
எனவே, இந்த மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட, அல்லது சும்மா கொஞ்சமாகப் பிரபலமாக முயற்சிக்கிற, சமூக ஊடகங்களில் முகம் காட்ட முயற்சிக்கிற அந்த 10 - 15 பேரின் போராட்டங்கள் எங்களுக்குச் சற்றும் சம்பந்தமில்லை. எங்களுக்கு ஒருபோதும் சம்பந்தமில்லை. எனவே அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கத்தினாலும் எங்களுக்குக் கவலையில்லை. அதற்குச் சென்றவர்கள் அந்த விளைவுகளை எதிர்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். அவர் தானே சொல்லியிருக்கிறார் என்று நான் பார்த்தேன், அவருக்கு யாரும் அடிக்கவில்லை, வேறு எங்கோ அடித்தது பட்டுவிட்டது என்று தானே?'