
ஈஸ்டர் தாக்குதலின் 'சூத்திரதாரி' என சந்தேகிக்கப்பட்டு கோட்டாபய ராஜபக்ஷ விசாரணைக்காக கைது செய்யப்படவுள்ளதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், ராஜபக்ஷ இன்று (12) காலை வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கிரிவிகாரைக்குச் சென்று வழிபட்டார். அவரது முகத்தில் கடும் பயமும் பதட்டமும் காணப்பட்டதாக சமூக ஊடகப் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரிவிகாரை ராஜமகா விகாராதிபதி வண. கொபவக்க தம்மின்த நாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற பின்னர், வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கிரிவிகாரை ஸ்தூபியின் முன் விசேட பூஜை நடத்தி, மகாசேன தேவன் மற்றும் தடிமுண்ட தேவனின் ஆசீர்வாதங்களைப் பெற்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுடன் அவரது மனைவியும் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ அஷ்டபல ரூஹ போதி மரத்தை வணங்கி ஆசீர்வாதம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
புகைப்படங்கள் - கிரிவிகாரை ஊடகப் பிரிவு