பல்லன்சேன முகாமிற்கு மாற்ற வேண்டாம், மெகசின் சிறைக்கைதிகள் தங்களுக்குள் காயப்படுத்திக்கொண்டனர்

transfer-to-the-pallansena-camp-with-wounded-magazine-prisoners

கொழும்பு புதிய மாகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆறு கைதிகளை பல்லன்சேன முகாமிற்கு மாற்றுவதற்கு சிறைச்சாலை நிர்வாகம் எடுத்த முடிவுக்கு எதிராக அந்தக் கைதிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ஐந்து கைதிகள் கூர்மையான ஆயுதத்தால் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தி சுயசேதம் விளைவித்துள்ளனர், மீதமுள்ள கைதி சிறைச்சாலை வளாகத்தில் உள்ள போதி மரத்தில் ஏறி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.




இவ்வாறு உடலுக்கு சேதம் விளைவித்த ஐந்து கைதிகளையும் உடனடியாக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். போதி மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட மற்றைய கைதி நேற்று (19) மாலை வரை மரத்திலேயே தங்கியிருந்ததாக சிறைச்சாலை உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதுள்ள அதிக நெரிசல் காரணமாகவே மாற்றுச் சிறைச்சாலைகளுக்கு கைதிகளை மாற்றுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது. பொதுவாக 900 கைதிகளுக்கு வசதிகள் கொண்ட புதிய மாகசின் சிறைச்சாலையில் தற்போது 2800 க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், இந்த நிலையை நிர்வகிப்பதற்காக அவ்வப்போது கைதிகள் பல்லன்சேன மற்றும் பூஸ்ஸா சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post