ஐபிஎல் 2026 ஏலத்தில் இலங்கை வீரர்களின் தலைவிதி!

the-fate-of-sri-lankan-players-in-the-ipl-2026-auction

 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், நேற்று நடைபெற்ற ஏலத்தில் அதிக மதிப்புமிக்க பதினைந்து வீரர்களில் இரண்டு இலங்கை வீரர்கள் இடம்பெற்றது ஒரு சிறப்பான நிகழ்வாகும்.



இங்கு அதிக கவனம் ஈர்த்த இலங்கை வீரர் மதீஷ பத்திரண, ஒட்டுமொத்த ஏலத்திலும் இரண்டாவது அதிக விலையைப் பெற்று, அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்திய ரூபாய் 18 கோடிக்கு வாங்கியது.




முதல்முறையாக இந்த ஏலத்தில் இடம்பெற்ற பதும் நிஸ்ஸங்கவை, அவரது அடிப்படை விலையான இந்திய ரூபாய் 75 லட்சத்தை தாண்டி, டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்திய ரூபாய் 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

வனிந்து ஹசரங்கவும் இந்த ஏலத்தில் விற்கப்பட்டார், அவரது அடிப்படை விலையான இந்திய ரூபாய் 2 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அவரை தங்கள் அணியில் இணைத்துக் கொண்டது.

இருப்பினும், இந்த ஏலத்தில் இடம்பெற்ற இலங்கை வீரர்களான மகேஷ் தீக்ஷனா, குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்க, தசுன் ஷானக, குசல் மெண்டிஸ், துனித் வெல்லாலகே, பினுர பெர்னாண்டோ மற்றும் ட்ராவின் மெத்தியூ ஆகியோர் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.

ஏலத்தில் இடம்பெறாத போதிலும், வீரர்கள் தக்கவைப்பு முறைமையின் கீழ் நுவன் துஷார ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும், இஷான் மாலிங்க மற்றும் கமிந்து மெண்டிஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், துஷ்மந்த சமீர டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் விளையாட உள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post