கைது செய்யப்பட்ட 'கெசல்வத்த தினுஷ' டுபாயில் இருந்து அழைத்து வரப்பட்டார்

arrested-banana-bugs-brought-from-dubai

சர்வதேச செம்பிரகடனம் வெளியிடப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'கெசல்வத்த தினுஷ' என்ற ஹேவாபேடிகே தினுஷ சதுரங்க, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இன்று (24) மாலை விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றினால் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பின்னர், விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.




இதற்கிடையில், இதேபோன்ற பெயரைக் கொண்ட 'கெசல்வத்த தினுக' என்ற மற்றொரு பாதாள உலக செயற்பாட்டாளர் 2021 ஆம் ஆண்டில் துபாயில் உயிரிழந்து அவரது உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தினுக, இவர் தினுஷ.

கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது தினுஷ, கெசல்வத்த, கொட்டாஞ்சேனை மற்றும் மட்டக்குளி உட்பட பல பிரதேசங்களில் இடம்பெற்ற பல கொலைகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும், துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை வைத்திருந்தமை மற்றும் கொழும்பு சுற்றுவட்டாரத்தில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாகவும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளன.




சந்தேகநபர் இன்று (24) மாலை 4.15 மணியளவில் இந்தியாவின் சென்னை நகரில் இருந்து இண்டிகோ (IndiGo) விமான சேவைக்கு சொந்தமான 6E-1179 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு கெசல்வத்த பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



இந்த நடவடிக்கை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் பொலிஸ் மா அதிபரால் மேற்கொள்ளப்பட்ட விசேட கலந்துரையாடலின் விளைவாகும். அதன்படி, இந்திய அரசாங்கம், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர், செம்பிரகடனம் வெளியிடப்பட்டிருந்த இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியை இலங்கைக்கு அழைத்து வர முடிந்துள்ளது.

பொலிஸார் குறிப்பிட்டுள்ளபடி, இந்த சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றுள்: 
* 2015 ஆம் ஆண்டில் கெசல்வத்த பொலிஸ் பிரிவில் கூரிய ஆயுதங்களால் தாக்கி மேற்கொள்ளப்பட்ட ஒரு கொலை. 
* 2018 ஆம் ஆண்டில் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒரு கொலையை மேற்கொள்ள உதவியது. 
* 2021 ஆம் ஆண்டில் மட்டக்குளி பொலிஸ் பிரிவில் கூரிய ஆயுதங்களால் தாக்கி மேற்கொள்ளப்பட்ட ஒரு கொலை. 
* 2021 ஆம் ஆண்டில் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் ஒரு உயிருள்ள கைக்குண்டை வைத்திருந்தமை. 
* கெசல்வத்த, வேல்லவீதி மற்றும் ப்ளூமெண்டல் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தமை. ஆகிய குற்றச்சாட்டுகள் முக்கியமானவை.

இந்த சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் முழுமையான வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்படும்.

arrested-banana-bugs-brought-from-dubai

Post a Comment

Previous Post Next Post