கொழும்பு மாநகர சபையில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் மொஹமட் புஹாரி பாத்திமா சொஹாரா அம்மையாரின் உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தேர்தல் பொறுப்பதிகாரி பியுமி ஆட்டிகல அம்மையார் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நடைபெற்ற இரண்டாவது வாக்கெடுப்பில் அவர் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வாக்களித்தமையே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதற்குக் காரணமாகும்.
அந்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சொஹாரா புஹாரி அம்மையாரின் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அங்கத்துவம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதால், அவர் அந்த சபையில் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது கட்சி வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு முரணாகச் செயற்பட்டமையால் அவருக்கு எதிராக இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தார்.