மீண்டும் கொழும்பு திரும்புவோருக்காக இன்று (18) மற்றும் நாளை (19) சிறப்பு ரயில்கள்

special-trains-for-those-coming-back-to-colombo-today-18-and-tomorrow-19

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறைக்காக தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் தங்கள் வேலை இடங்களுக்கும் வீடுகளுக்கும் திரும்புவதற்கு வசதியாக இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த விசேட ரயில் சேவைகள் 2026 ஏப்ரல் மாதம் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களில் செயற்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அறிவிப்பொன்றை வெளியிட்டு ரயில்வே பொது முகாமையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சாதாரண ரயில் கால அட்டவணைக்கு மேலதிகமாக, அநுராதபுரம், காங்கேசன்துறை, மாத்தறை மற்றும் பெலியத்த ஆகிய பிரதேசங்களை மையமாகக் கொண்டு இந்த விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.




அதன்படி, கொழும்பு கோட்டைக்கும் அநுராதபுரத்திற்கும் இடையில் ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களில் பல விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும். காலை 7.40 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் ரயில் காலை 11.35 மணிக்கு அநுராதபுரத்தை சென்றடையவுள்ளதுடன், அதே ரயில் மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரத்திலிருந்து புறப்பட்டு பிற்பகல் 6.05 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும். மேலும், இந்த இரு தினங்களிலும் காலை 6.40 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு காலை 10.38 மணிக்கு அநுராதபுரத்தை சென்றடையும் மற்றுமொரு விசேட ரயில், அதே நாளில் காலை 10.50 மணிக்கு மீண்டும் அநுராதபுரத்திலிருந்து புறப்பட்டு பிற்பகல் 2.54 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தில் காங்கேசன்துறைக்கும் அநுராதபுரத்திற்கும் இடையில் ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களிலும் விசேட ரயில் ஒன்று இயக்கப்படும். அது காலை 6.00 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு காலை 10.18 மணிக்கு அநுராதபுரத்தை வந்தடையும். மீண்டும் காலை 10.50 மணிக்கு அநுராதபுரத்திலிருந்து புறப்பட்டு பிற்பகல் 2.22 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது.

தென் மாகாணத்திலிருந்து வரும் மக்களுக்காகவும் பல விசேட ரயில்கள் கரையோரப் பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 18 ஆம் திகதி மட்டும் பிற்பகல் 1.00 மணிக்கு மருதானையிலிருந்து புறப்படும் ரயில் பிற்பகல் 4.37 மணிக்கு மாத்தறையை வந்தடையும். ஏப்ரல் 19 ஆம் திகதி காலை 11.15 மணிக்கு மாத்தறையிலிருந்து புறப்படும் விசேட ரயில் பிற்பகல் 2.47 மணிக்கு மருதானையை வந்தடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஏப்ரல் 18 ஆம் திகதி பிற்பகல் 4.40 மணிக்கு மருதானையிலிருந்து புறப்படும் ரயில் இரவு 8.40 மணிக்கு பெலியத்த ரயில் நிலையத்தை வந்தடையும். அத்துடன், ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களிலும் காலை 8.20 மணிக்கு பெலியத்தையிலிருந்து புறப்படும் விசேட ரயில் பிற்பகல் 12.30 மணிக்கு மருதானையை வந்தடையவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.




Post a Comment

Previous Post Next Post