தாழ்தளப் பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்

flatbed-bus-service-will-start-from-today

இன்று (21) மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்துத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், விசேட தாழ்வான தளங்களைக் கொண்ட பேருந்து சேவை ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. மாக்கும்புர பல்துறை போக்குவரத்து மையத்தில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க உட்பட பல அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.




தற்போதைய அரசாங்கத்தின் 'அனைவருக்கும் சம வாய்ப்புகளையும் மனித கௌரவத்தையும் பாதுகாக்கும் நாடு' என்ற கொள்கை நோக்கத்தின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சித்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 430.7 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, 'சுத்தமான இலங்கை' திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் மற்றொரு தனித்துவமான திட்டமாக குறிப்பிடப்படலாம்.

ஆரம்பக் கட்டத்தின் கீழ், இந்த பேருந்து சேவை மாக்கும்புரவிலிருந்து கொழும்பு வரை இயக்கப்படவுள்ளதுடன், பயணிகளுக்கு திறமையான சேவையை வழங்கும் நோக்கில் இது தேர்ந்தெடுக்கப்பட்ட 07 பேருந்து நிறுத்தங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட புதிய மொபைல் செயலியும் (Mobile App) இந்த நிகழ்வுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

flatbed-bus-service-will-start-from-today

flatbed-bus-service-will-start-from-today

flatbed-bus-service-will-start-from-today

Post a Comment

Previous Post Next Post