தெவிநுவர காவடி நடனக் கலைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது

devinuwara-kavadi-dancers-arrested-with-drugs

தெவிநுவர உத்தபலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த பெரஹரா விழாவில் காவடி நடனமாட வந்திருந்த பல குழுக்களின் உறுப்பினர்கள் போதைப்பொருட்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.




தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்ஸிரி ஜயலத் அவர்களின் பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, இன்று (28) அதிகாலையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று இரவு நடைபெறும் பெரஹராவில் நடனமாடவுள்ள அனைத்து காவடி குழுக்களின் உறுப்பினர்களும் பெரஹராவில் இணைவதற்கு முன்னர் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்ஸிரி ஜயலத் 'தசத நியூஸ்' செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.




அத்துடன், இன்று இரவு நடைபெறும் பெரஹராவின் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் சுமார் 1,500 பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post