நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆரச்சி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். குறித்த சட்டமூலத்தில் உள்ள ஏற்பாடுகள் மக்கள் இறைமைக்கோ அல்லது நீதித்துறையின் சுதந்திரத்திற்கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், எனவே அதனை நிறைவேற்ற பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரால் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.