இன்று காலை மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையால் ஏற்பட்ட அழிவுகளின் சில புகைப்படங்கள் இதனுடன் வெளியிடப்படுகின்றன. தற்போது பாதுகாப்புப் படையினர் நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஒரு குழு கைதிகள் சிறையிலிருந்து தப்பிக்க முயன்றதால் இந்த மோதல் ஏற்பட்டது, அப்போது அவர்கள் ஏற்படுத்திய அழுத்தங்களை அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இந்த கலவரமான சம்பவங்களின் போது, கைதிகள் சிறைச்சாலையின் நிர்வாகக் கட்டிடங்களுக்கு தீ வைத்து பல சொத்துக்களுக்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.