
காலமான சிரேஷ்ட பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா அவர்களின் இறுதிச் சடங்குகள் நாளை (03) நடைபெறவுள்ளன. நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று (01) இரவு காலமானபோது 64 வயதாக இருந்தது.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று மாலை முதல் பொரளை பகுதியிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சிரேஷ்ட பாடகர் காலஞ்சென்ற மில்டன் பெரேரா அவர்களின் மூத்த மகனான பிரியங்கர பெரேரா, பாடகர் சலக சமுபதியின் சகோதரரும் ஆவார். அவரது மனைவி பிரபலமான நடிகை தில்ஹானி அசோகமாலா ஆவார். தந்தையின் இசை மரபை முன்னெடுத்து இத்துறைக்குள் நுழைந்த அவர், குறிப்பாக 80கள் மற்றும் 90களில் கேசட் காலத்தில் இநாட்டு ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்த ஒரு பிரபலமான பாடகராக மாறினார்.
'ரன் பொக்குணேன் திய நாகென என்னே', 'சிஹின தெவ்தூவே', 'பிஸ்ஸு விகாரே', 'அகாத சாகரயே', 'சமான வீ இபதீ திவி தலாவே' மற்றும் 'பெர ஆத்மயக எக ராத்ரியக' போன்ற பல பிரபலமான பாடல்களை தனது இனிமையான குரலால் இசைத்துறைக்கு வழங்கிய அவர், பாடகராக மட்டும் நின்றுவிடாமல், பின்னர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகராகவும் ரசிகர்களின் அன்பைப் பெற்றார்.