
இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் அரசாங்கம் ஏழு புதிய தாழ்தள (low-floor) பேருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான அபிவிருத்தி ஒத்துழைப்பின் மற்றொரு சாதகமான படியாக இந்த நன்கொடை அமைந்துள்ளது.
ஜப்பான் அரசாங்கத்தினதும் அந்நாட்டின் யோகோஹாமா நகர மக்களினதும் கூட்டுப் பங்களிப்புடன் வழங்கப்பட்ட இந்தப் பேருந்துக் குழுமம் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதுவர் HE Akio Isomata அவர்களால் இந்த உத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.