மோடி அனுராவுக்கு தொலைபேசி அழைப்பு

modi-calls-anura

 ‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் அனைத்து பேரிடர் பகுதிகளிலும் புனர்வாழ்வுப் பணிகளுக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்க இந்தியா தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் நேற்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்தியப் பிரதமர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.



தற்போதைய பேரிடர் நிலைமை காரணமாக இலங்கையில் பதிவான உயிர் மற்றும் சொத்து இழப்புகள் குறித்து இந்தியப் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்,


இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்கள் இலங்கை மக்களுடன் உறுதியாக நிற்பார்கள் என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

இந்த பேரழிவின் போது இந்தியா விரைவாக வழங்கிய நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு வழங்கிய சிறப்பான பங்களிப்புக்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பிரதமர் மோடிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

பிராந்தியத்தின் முதல் பதிலளிப்பாளராக, எதிர்வரும் நாட்களில் இலங்கையின் புனர்வாழ்வு செயல்முறைக்கு உதவுவதாகவும், தடைபட்ட பொது சேவைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் இந்தியப் பிரதமர் மேலும் உறுதியளித்தார்.

Post a Comment

Previous Post Next Post