மல்வத்து ஓயாவில் நீர்மட்டம் உயர்வு: தந்திரமலைக்கு வெள்ள அபாயம்!

rising-water-level-in-malwathu-oya-poses-flood-risk-to-thanthirimale

மல்வத்து ஓயாவில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், நீர்ப்பாசனத் திணைக்களம் தந்திரமலைப் பிரதேசத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.



இருப்பினும், இன்று காலை 06.30 மணி நிலவரப்படி பெறப்பட்ட தரவுகளின்படி, நாட்டின் ஏனைய நதிகளின் நீர்மட்டம் தற்போது சாதாரண நிலையில் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.




மேலும், இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 21 மணிநேர காலப்பகுதியில், நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சி பாணதுகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளதுடன், அதன் அளவு 120.8 மில்லிமீட்டராகும்.

இக்காலப்பகுதியில் உராவ் பிரதேசத்தில் 67.8 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும், எல்லகாவ பிரதேசத்தில் 58.7 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post