மகாவலி மையத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த நலன்புரி நிகழ்ச்சித் திட்டத்தில் தரிந்திரி பெர்னாண்டோ, பிரியந்த சிசிர குமார,
சேமினி இத்தமல்கொட, கலன குணசேகர, தசுன் பத்திரண, சதுர ராஜபக்ஷ, சமத்கா லக்மினி மற்றும் தனுஷி திசாநாயக்க உள்ளிட்ட பல பிரபலமான கலைஞர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் இடம்பெயர்ந்த மக்களுடன் இணைந்து பாடல்களைப் பாடியும், பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் பாதிக்கப்பட்ட மக்களின் மனதை ஆற்றுப்படுத்த பங்களித்தனர்.
இந்த நிகழ்ச்சித் திட்டம் ஒரு முகாமுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், கொத்மலைப் பிரதேசம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள மேலும் பல இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Tags:
News