நெல், சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் சோயாபீன்ஸ் பயிரிடுவோருக்கு வெள்ளச் சேத இழப்பீடு

flood-damage-compensation-for-paddy-maize-onion-potato-chilli-and-soybean-growers

 தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக தீவு முழுவதும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் சோயாபீன்ஸ் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு, அதற்கான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

தீவின் இருபத்தைந்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் சபையின் தலையீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அதன் தலைவர் பேமசிறி ஜாசிங்காரச்சி தெரிவித்தார்.




தற்போது அனர்த்த நிலை நிலவுவதால் ஏற்பட்ட சேதங்களை துல்லியமாக மதிப்பிடுவது கடினமாக உள்ளது. எனவே, வெள்ளம் வடிந்தவுடன் சம்பந்தப்பட்ட கமநல சேவை நிலையங்களுக்குச் சென்று, அங்குள்ள பயிர்ச் சேத அறிவிப்புப் புத்தகங்களில் தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை பதிவு செய்யுமாறு தலைவர் விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

பயிர் நிலங்களில் இருந்து நீர் வடியவில்லை என்றால், அது குறித்து உடனடியாக கமநல சேவை பிரதேச அதிகாரி அல்லது விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி அதிகாரிக்கு அறிவிக்குமாறு விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது. இந்த சேதங்களை அறிவிக்க ஒரு மாத காலம் வழங்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை விரைவாக முடித்து இழப்பீட்டுத் தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.




மேலே குறிப்பிடப்பட்ட பயிர்களுக்கு மேலதிகமாக, ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், பயிர் அமைந்துள்ள பிரதேசத்தின் கமநல சேவை நிலையத்தில் பராமரிக்கப்படும் புத்தகங்களில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். பயிர்ச் சேத அறிவிப்பு தொடர்பாக ஏதேனும் பிரச்சனை அல்லது ஆலோசனை தேவைப்பட்டால், 1918 என்ற விவசாய காப்புறுதி சபையின் அவசர அழைப்பு எண்ணைத் தொடர்புகொள்வதன் மூலம் அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கமநல அபிவிருத்தி திணைக்களமும் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையும் இணைந்து இந்த இழப்பீட்டு வழங்கும் செயல்முறையை மேற்கொள்கின்றன.

Post a Comment

Previous Post Next Post