பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில் முதல் தானியங்கி எல்லைக் கட்டுப்பாடு (ABC) மின்னணு வாயில்கள் (e-gates) இன்று (28) முதல் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பிரதான குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ அவர்கள் குறிப்பிடுகையில், இன்று முதல் நான்கு மின்னணு வாயில்கள் செயற்படவுள்ளன.
இந்த திட்டம், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, ஜப்பான் அரசாங்கம் மற்றும் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு (IOM) ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் ஒரு முயற்சியாகும்.
புதிய மின்னணு வாயில்கள் மூலம் விமான நிலையத்தின் செயல்பாட்டுத் திறன் கணிசமாக மேம்படுத்தப்படும் என்று ஜூட் பெர்னாண்டோ அவர்கள் மேலும் வலியுறுத்தினார்.
இந்த புதிய முயற்சி, ஜப்பானிய நிதியுதவியின் கீழ் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு (IOM) செயல்படுத்தும் ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாகும். குறிப்பாக தென்மேற்கு ஆசியாவில் தொற்றுநோய்களுக்கு பதிலளிக்கும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு திறன்களை வலுப்படுத்துவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.