யோஷித மற்றும் டேசி பாட்டியின் வழக்கு மீண்டும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்படும்

yoshita-and-daisy-achchis-case-gets-delayed-again-for-a-month

பணமோசடி தடுப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.




அங்கு கருத்து தெரிவித்த அரச சட்டத்தரணி, இந்த வழக்கு தொடர்பான ஒரு விடயம் குறித்து பிரதிவாதி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவித்தார். குறித்த மேன்முறையீடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதால், அந்த திகதிக்குப் பின்னர் வரும் ஒரு திகதியில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரினார். முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள செப்டம்பர் 28 ஆம் திகதியை நிர்ணயித்தார்.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், பிரதிவாதிகள் சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 57 மில்லியன் ரூபாவை மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post