சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை மீளக்கட்டியெழுப்ப இந்தியாவிலிருந்து 450 மில்லியன் டொலர்கள்

india-funds-sri-lanka-cyclone

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “திட்வா” சூறாவளியால் இலங்கைக்கு ஏற்பட்ட சேதங்களை புனரமைப்பதற்காக 450 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை இந்தியா வழங்க முன்வந்துள்ளது என்று அறிவித்துள்ளார்.

இந்த உதவித் தொகுப்பில் 350 மில்லியன் அமெரிக்க டாலர் சலுகைக் கடனும், 100 மில்லியன் அமெரிக்க டாலர் மானியமும் அடங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, “திட்வா” சூறாவளியால் இலங்கைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சர் தெரிவித்தார். இதன்போது பிரதமர் நரேந்திர மோடியின் கடிதம் தொடர்பாகவும் கருத்து தெரிவித்த ஜெய்சங்கர், “இந்தியா தனது முதல் பிரதிபலிப்புப் பணியை மேற்கொண்டதன் மூலம், இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர் புனரமைப்புப் பொதியை வழங்கியுள்ளது” என்றார். மேலும் கருத்து தெரிவிக்கையில், “இந்த அர்ப்பணிப்பை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து எமது கலந்துரையாடல் மையப்படுத்தப்பட்டது” என்று அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் அண்மைய அசல்வாசியாக, இவ்வாறான ஒரு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் (பொருளாதார துரதிர்ஷ்டவசமான நிலையில்) இந்தியா முன்வருவது இயல்பானது என்று அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார். இந்த அறிவிப்பு கொழும்பில் வெளிவிவகார அமைச்சர் விஜேதாச ஹேரத்துடன் இடம்பெற்ற ஒருமித்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post